தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளரை ஆதரித்து பெரியகுளத்தில் ஸ்டாலின் மேற்கொண்ட பிரசாரத்தில் போதிய வசதிகள் செய்யாததால், உச்சி வெயிலில் அமர்ந்திருந்த மக்கள் அவதிக்கு உள்ளாகினர். தேனி மக்களவை தேர்தல் மற்றும் ஆண்டிப்பட்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி, திமுக வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். பெரியகுளத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் குறித்து ஏதுவும் கூறாமல் அரசை குறைகூறிக் கொண்டே இருந்ததால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
பிரசாரத்தில் போதிய வசதிகள் செய்யாததால்,உச்சி வெயிலில் பொதுமக்கள் தலையில் முக்காடு போட்டபடி அமர்ந்திருந்தனர். ஸ்டாலினின் பேச்சு ஆக்கப்பூர்வமாக இல்லாததால், அதனை கேட்க முடியாமல், அங்கிருந்து ஒவ்வொருவராக கலைந்து சென்றனர்.
Discussion about this post