குற்றாலத்தில், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டிக் கிடக்கும் மூலிகைத் தோட்டத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குற்றால மலைப் பகுதிகளில் உள்ள மூலிகைச் செடிகளை பாதுகாக்கும் வகையிலும், மூலிகை வளங்கள் பற்றி சுற்றுலாப் பயணிகள் அறிந்து கொள்ளும் வகையிலும், கடந்த 2002ஆம் ஆண்டு, மூலிகைத் தாவரங்கள் விளக்க மையம் அமைக்கப்பட்டது. தற்போது, இந்த மையம் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக செயல்படாமல் பாழடைந்து காணப்படுகிறது. குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகள், மூலிகை வளங்களால் ஏற்படும் பயன்கள் பற்றி அறிய முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
Discussion about this post