9 ஆண்டுகளுக்குப்பின் கைதுசெய்யப்பட்ட மதுரை நிதிநிறுவன மோசடி மன்னன்!

Thanigaimalai madurai

மதுரையில் நிதிநிறுவனம் நடத்தி பலகோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு தலைமறைவாக இருந்த நபர், 9 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

பி.ஜி.மார்க்கெட்டிங் என்ற பெயரில் தணிகைமலை என்பவர் நிதி நிறுவனத்தை நடத்தி 170 பேரிடம் 3 கோடியே 70 லட்ச ரூபாயை மோசடி செய்ததாக கடந்த 2013-ம் ஆண்டு பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தணிகைமலை தொடர்ந்து தலைமறைவாக இருந்துவந்த நிலையில் அவரை போலீசார் தேடி வந்தனர். அவருடைய ஆதார் கார்டு பயன்பாட்டை வைத்து திருமுல்லைவாயலில் பதுங்கியிருந்தவரைப் போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர்.

Exit mobile version