தென்காசி தனியார் விடுதியில் மதுரையைச் சேர்ந்த தம்பதி விஷம் குடித்து தற்கொலை! ஆபத்தான நிலையில் மகள் மீட்பு!

madurai couple suicide

தென்காசி அருகே தனியார் விடுதியில் மதுரையை சேர்ந்த தம்பதி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையை சேர்ந்த மகாலிங்கம் அவரது மனைவி மற்றும் மகளுடன் குற்றாலத்தில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் அறையின் கதவு திறக்கப்படாமல் பூட்டி இருந்த நிலையில், விடுதி ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்துள்ளனர்.

அப்போது மகாலிங்கம் மற்றும் அவரது மனைவி கட்டிலில் இறந்த நிலையிலும், மகள் தனபிரியா உயிருக்கு ஆபத்தான நிலையிலும் இருந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற குற்றாலம் காவல்துறையினர் இறந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர். தனப்பிரியாவை தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்து விசாரணை மேற்கொண்டு வருகிறன்றனர்.

Exit mobile version