8 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால், சென்னை உள்ளிட்ட 8 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கிழக்கு மத்திய வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, மேலும் வலுப்பெறலாம் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. இதன்காரணமாக வட தமிழகத்தில் மழை பெய்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இந்தநிலையில், கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதாலும் சீரற்ற வானிலை நிலவுவதாலும் சென்னை, கடலூர், நாகை, பாம்பன், காரைக்கால் மற்றும் புதுச்சேரி துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் சின்னம் காரணமாக தெற்கு மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால், அந்தமான், தெற்கு வங்கக்கடல், ஆந்திரா மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

Exit mobile version