செந்தில் பாலாஜி மீது 7000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

அரவக்குறிச்சி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் செந்தில்பாலாஜி. தற்போது கரூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறார். அரசுத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஒரு கோடியே 62 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி, மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த மத்திய குற்றபிரிவு காவல்துறையினர், 7ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை, சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

Exit mobile version