தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 7 பேர் பணியிட மாற்றம்

6 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அரியலூர் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த வினய் அரியலூர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ராமன், சேலம் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் செயலாளர் ராஜசேகர், மதுரை மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு இசைக் கல்லூரியின் பதிவாளராக உள்ள சீதாலட்சுமி சென்னை மாவட்ட ஆட்சியராகவும், சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த சண்முக சுந்தரம் வேலூர் மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த ரோகிணி இசைக் கல்லூரியின் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version