டெல்லியில் நாளை ஜிஎஸ்டி கவுன்சில் 34-வது கூட்டம்

டெல்லியில் நாளை நடைபெறவுள்ள 34-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் ஜி.எஸ்.டி என்ற ஒரே சீரான வரியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த வரி அமலாக்கத்தை நெறிப்படுத்த ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டது. மத்திய நிதியமைச்சர் மற்றும் மாநில நிதியமைச்சர்களை உறுப்பினர்களாக கொண்ட இந்த கவுன்சில், அவ்வப்போது ஜி.எஸ்.டி. குறித்து விவாதித்து பல்வேறு முடிவுகளை செயல்படுத்தி வருகிறது.

அந்தவகையில் இந்த கவுன்சிலின் 34-வது கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கிடையில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 10-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இதனால் நாளை நடைபெறவுள்ள ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு, தலைமை தேர்தல் ஆணையரின் அனுமதி பெற வேண்டி இருந்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட கடித்ததை பரிசீலித்த தேர்தல் ஆணையம், இந்த கூட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

Exit mobile version