30 லட்சம் நகைகள் பறிமுதல் – போலீசார் அதிரடி

 

வாலாஜாபாத்தில் 2 கொள்ளையர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின்பேரில் இரு சக்கர வாகனத்தில் வந்த திருச்சியை சேர்ந்த சிங்கார வேலன், வேலூரை சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவரை கைது செய்தனர். கடந்த 6 மாதங்களாக வாலாஜாபாத் பகுதியில் பூட்டியிருந்த வீடுகளில் அவர்கள் கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்தது.
அவர்களை கைது செய்த போலீஸார், 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 125 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

Exit mobile version