கோவையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி

கோவையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலியான சம்பவம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கீரநத்தம் பகுதியில் உள்ள வீட்டின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் மூன்று தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென்று விஷவாயு தாக்கியதில், 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Exit mobile version