பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடையில் திருடிய 3 பெண்கள் கைது

சென்னை மாதவரம் அருகே பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடையில் இரவு பூட்டை உடைத்து திருடிய 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

மாதவரம் தட்டான்குளம் லோட்டஸ் காலனி 3-வது தெருவில் உள்ள பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடை ஒன்றுள்ளது. அங்கு இரவு பூட்டை உடைத்து பழைய காப்பர், அலுமினியம் போன்றபொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர். காலையில் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர், காவல் நிலையத்தில் புகார் செய்தார். பின் காவல்துறை ஆய்வாளர் தொடர் விசாரணையில், கொளத்தூரைச் சேர்ந்த மஞ்சுளா, ஜெயக்கொடி, விஜயா ஆகிய மூவர் திருடியது தெரியவந்தது. பின் மூவரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர் .

Exit mobile version