வீச்சருவாளால் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாட்டம்: 3 பேர் கைது

பொதுமக்களுக்கு அச்சம் விளைவிக்கும் விதமாக கோவையில் கத்தி, வீச்சரிவாள்களுடன் பிறந்தநாள் கொண்டாடி பேஸ்புக்கில் போட்டோ வெளியிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக சட்டத்திற்கு விரோதமாக அபாயகரமான ஆயுதம் வைத்திருந்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சரவணம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுந்தரம், சதீஷ்குமார் ஆகிய இருவரை கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்டுள்ள கனி அமுதன் மீது கடந்த 2013 ஆம் ஆண்டு ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version