News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

2ஜி ஊழல் வழக்கில் நீதிபதி மாற்றம் ஏன்? என்ன?

Web Team by Web Team
September 17, 2019
in TopNews, இந்தியா, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
2ஜி ஊழல் வழக்கில் நீதிபதி மாற்றம் ஏன்? என்ன?
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியின் போது நடந்த 2ஜி ஊழல் நாட்டையே உலுக்கியது. அந்த 2ஜி ஊழல் வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில் தற்போது நீதிபதி மாற்றப்பட்டு உள்ளார். ஏன் இந்த மாற்றம்? 2ஜி வழக்கில் ஏற்படுத்தும் தாக்கங்கள் என்ன?

காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் இணைந்து உருவாக்கிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின் போது, 2 ஜி எனப்படும் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாக, அன்றைய அரசின் மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் அறிக்கை அளித்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தியது. திமுகவின் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட பலரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் சிபிஐ திறம்பட செயல்படாத காரணத்தால் 2017-ம் ஆண்டு குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யாத சிபிஐ-அமைப்பை நீதிபதி கடுமையாக விமர்சித்தார்.

அந்தத் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீட்டுக்குச் சென்றது. 2019 மார்ச்சில் 2ஜி மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ஓ.பி.சைனி அதுவரை பதில் மனுத்தாக்கல் செய்யாதவர்கள், தங்கள் பதில் மனுக்களை தாக்கல் செய்யவும், அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. பதில் மனுக்களை தாக்கல் செய்யவும் அவகாசங்களை வழங்கி வழக்கை வரும் அக்டோபர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

2ஜி வழக்கில் போதிய சாட்சியங்கள் இல்லாததால் குற்றவாளிகளை விடுவித்தது மட்டுமின்றி, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தயாநிதி மாறனை விடுவித்துத் தீர்ப்பளித்தவரும் இதே ஓ.பி.சைனியே ஆவர். இவர் சமீபத்தில் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இருந்து ப.சிதம்பரம் – கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கும் முன்ஜாமீன் வழங்கினார்.

இந்நிலையில் நீதிபதி ஓ.பி.சைனியின் பதவிக்காலம் அடுத்த மாதத்தோடு நிறைவடைய உள்ளதால், இன்று 2ஜி தொடர்பான அனைத்து வழக்குகளும் சிபிஐ சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹாருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. 2ஜி வழக்கை இனி விசாரிக்க உள்ள நீதிபதி குஹார் ப.சிதம்பரத்தின் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கை விசாரித்துவருபவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

2ஜி ஊழல் நடந்த காலகட்டத்தில் இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்தவர் சிதம்பரம், எனவே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு அவருக்குத் தெரியாமல் நடந்திருக்காது – என்று ஊடகங்கள் தொடர்ந்து கூறி வருகின்றன. சில ஆயிரம் கோடிகள் தொடர்புடைய ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழலில் ப.சிதம்பரத்திற்குத் தொடர்பு உள்ள போது, ஒரு லட்சம் கோடிக்கும் மேல் பண மதிப்பு உடைய 2ஜி வழக்கில் அவரது பங்கு கண்டிப்பாக இருக்கும் – என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருந்தது.

இந்நிலையில், இந்த அடிப்படையில் தொடர்புடைய இரண்டு வழக்குகளையும் ஒரே நீதிபதி விசாரிப்பதால் 2ஜி வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதோடு, 2ஜி வழக்கில் ப.சிதம்பரம் போன்றவர்களின் பங்கு என்ன என்பது கூட தெரிய வரலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன.

Tags: 2gjudgenewsj
Previous Post

பிகில் ரிலீஸ் எப்போது?- புது தகவலை வெளியிட்ட ஏஜிஎஸ் நிறுவனம்

Next Post

அயர்லாந்தில் நடைபெறும் உலகின் மிகப்பெரிய உணவுத்திருவிழா

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!

September 22, 2023
Next Post
அயர்லாந்தில் நடைபெறும் உலகின் மிகப்பெரிய உணவுத்திருவிழா

அயர்லாந்தில் நடைபெறும் உலகின் மிகப்பெரிய உணவுத்திருவிழா

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version