60 வயது மூதாட்டி உடன் காதலில் விழுந்த 22 வயது இளைஞர்

60 வயதான மூதாட்டியை விட்டு செல்லமாட்டேன் என்று கதறும் 22வயது இளைஞனுக்கு எதிராக அமைதியை குலைத்ததற்காக வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.

காதலுக்கு கண்ணில்லை என்று தான் நாம் கேட்டிருப்போம். இந்த சம்பவத்தை பார்க்கும் பொழுது காதலுக்கு வயது இல்லை தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் 60 வயது மூதாட்டி உடன்  22 வயதான இளைஞர் காதலில் விழுந்துள்ள சம்பவம் பார்ப்பவர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

60 வயது மூதாட்டியும் 22 வயது இளைஞனும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த பெண்ணின் கணவரும், மகனும் காவல் நிலையத்தில் இளைஞருக்கு எதிராக புகார் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த மூதாட்டியும் இளைஞனும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறியுள்ளனர்.ஆனால் அந்த மூதாட்டிக்கு ஏற்கனவே ஏழு குழந்தையும் அவர்களின் மூலமாக பேரன்களும் உள்ளதால் குடும்பத்தினர்கள் இந்த உறவு சரியாக இருக்காது என்று கண்டித்துள்ளனர்.

இந்த விசித்திர பிரச்சனையால் அதிர்ச்சி அடைந்த போலீசார் இருவரையும் அழைத்து சமூகம், குடும்ப அந்தஸ்து ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த பொருந்தாக் காதலை விட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளனர்.ஆனால் அவர்கள் இருவரும் எதையும் ஏற்கும்படி நிலையில் இல்லை. பின்பு அந்த இளைஞன் மீது அமைதியை குலைத்துத்திற்காக வழக்குப்பதிவு செய்து பின்பு இருவரையும் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இந்த விசித்திரக் காதல் கதையானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version