News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

சந்திரயான் சாதனைக்காக பணியாற்றிய 16,500 விஞ்ஞானிகள்

Web Team by Web Team
September 8, 2019
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
சந்திரயான் சாதனைக்காக பணியாற்றிய 16,500 விஞ்ஞானிகள்
Share on FacebookShare on Twitter

சறுக்கல்களை சாதனைகளாக மாற்றி வரும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கண் கலங்கியது, நாட்டு மக்களை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது. நிலவில் தரையிறங்குவதற்கு 2.1 கிலோ மீட்டர் தூரத்தில், சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், தொடர்பை இழந்தது. முதல் முயற்சிலேயே இதுவரை எந்த நாடும் செல்லாத நிலவின் தெற்கு முனைக்கு மிக அருகில் சென்ற இந்தியாவின் வரலாற்றுச் சாதனையின் பின்னணியில் 16 ஆயிரத்து 500 விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு உள்ளது.

சந்திராயன்-2 திட்டத்திற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகள் இரவு, பகலாக உழைத்த உழைப்புக்கு, இன்று நாடே பாராட்டு தெரிவித்து வருகிறது. 95 சதவீதம் வெற்றி கண்டுள்ள நிலையிலும், ஒரு சிறிய பின்னடைவு, விஞ்ஞானிகளை கண்கலங்கச் செய்தது.

1982 ஆம் ஆண்டு இஸ்ரோவில் இணைந்து, தற்போது அதன் தலைவர் பதவி வரை உயர்ந்துள்ள சிவன், சந்திரயான்-2 திட்டத்தின் மூலம், உலகை இன்று திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். விக்ரம் லேண்டர் கட்டுப்பாட்டை இழந்தாலும், ஆர்பிட்டர் தொடர்ந்து இயங்கி வருவதற்கு, விஞ்ஞானிகளின் கடும் உழைப்பே காரணம் என்றால், அது மிகையாகாது. பெரும் முயற்சியில் ஏற்பட்ட சிறிய சரிவால், மனமுடைந்து கண்ணீர் விட்ட இஸ்ரோ தலைவர் சிவனை, பிரதமர் மோடி தட்டுக்கொடுத்து தேற்றியது, காண்போரையும் கண்ணீர் விட வைத்தது.

இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில், விஞ்ஞானிகளின் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, விஞ்ஞானத்தில் தோல்வி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றார். நிலவை ஆய்வு செய்வோம், நமது விண்வெளித் திட்டங்களில் புதிய உச்சங்கள் இனிமேல் தான் வரவுள்ளது எனவும், இரவு பகலாக உழைத்த விஞ்ஞானிகளின் முயற்சி, ஒரு போதும் வீண் போகாது என நம்புவதாகவும் அவர் கூறியது, அங்கு துவண்டு போயிருந்த விஞ்ஞானிகளிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இதனிடையே, சந்திராயன் சாதனைக்காக பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Tags: இஸ்ரோசந்திரயான்-2சந்திரயான்-2 விண்கலம்விண்கலம்
Previous Post

உணவு டெலிவரி வர்த்தகத்தில் மீண்டும் கால்பதிக்கிறது அமேசான்

Next Post

சென்னையில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் இன்று கரைப்பு

Related Posts

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு
TopNews

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு

December 12, 2019
சந்திரயான்-3 திட்டத்தை 2020 நவம்பரில் செயல்படுத்த இஸ்ரோ முடிவு
TopNews

சந்திரயான்-3 திட்டத்தை 2020 நவம்பரில் செயல்படுத்த இஸ்ரோ முடிவு

November 14, 2019
நிலவுக்கு மீண்டும் விண்கலம் அனுப்பி லேண்டர் தரையிறக்கப்படும்: இஸ்ரோ தலைவர்
TopNews

நிலவுக்கு மீண்டும் விண்கலம் அனுப்பி லேண்டர் தரையிறக்கப்படும்: இஸ்ரோ தலைவர்

November 2, 2019
விக்ரம் லேண்டர் தொடர்பு இழந்தது குறித்து இறுதிக்கட்ட ஆய்வில் இஸ்ரோ
TopNews

விக்ரம் லேண்டர் தொடர்பு இழந்தது குறித்து இறுதிக்கட்ட ஆய்வில் இஸ்ரோ

September 20, 2019
விக்ரம் லேண்டரின் மின்னாற்றல் குறைந்து கொண்டே வருகிறது
TopNews

விக்ரம் லேண்டரின் மின்னாற்றல் குறைந்து கொண்டே வருகிறது

September 16, 2019
சந்திரயான்-2 திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த மத்திய அரசு முடிவு: நிர்மலா சீதாராமன்
TopNews

சந்திரயான்-2 திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த மத்திய அரசு முடிவு: நிர்மலா சீதாராமன்

September 10, 2019
Next Post
சென்னையில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் இன்று கரைப்பு

சென்னையில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் இன்று கரைப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version