புத்தக காட்சியில் 16கோடி புத்தகங்கள் விற்பனை!

சென்னைப் புத்தகக் கண்காட்சியானது  நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், இந்த ஜனவரிமாதம் 6ஆம் தேதி தொடங்கி நேற்று 22ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமையில் நிறைவடைந்துள்ளது. இது சென்னையில் நடைபெறும் 46வது சென்னைப் புத்தக கண்காட்சி ஆகும். இதனையொட்டி பல வாசகர்கள் தொடர்ந்து புத்தக கண்காட்சிக்கு வந்து புத்தகங்களை அள்ளிச் சென்றுள்ளனர். இந்த நிலையில் நேற்றைய தினம் புத்தக கண்காட்சி நிறைவடைந்ததை ஒட்டி அதனை நிர்வகித்த பபாசி குழுவின் செயலாளர் எஸ்.கே முருகன் விற்பனையான புத்தகங்களை மொத்த மதிப்பினை செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட இந்த சென்னைப் புத்தக கண்காட்சி 17 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. 15 இலட்சத்துக்கு மேலான வாசகர்கள் வருகை புரிந்துள்ளனர். மொத்தமாக 16 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை ஆகியுள்ளன என்று பபாசி குழு தெரிவித்துள்ளது.

Exit mobile version