திருப்பதியில் செம்மர கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த 11 பேர் கைது

திருப்பதியில் செம்மர கடத்தலில் ஈடுப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 11 பேர் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பதியில் உள்ள செம்மரக் கடத்தல் தடுப்பு  போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது  ஸ்ரீனிவாச மங்காபுரம் எதிரே உள்ள வனப்பகுதியில் இருந்து ஒரு கார் மற்றும் ஒரு டெம்போ டிராவலர் வருவதை பார்த்த காவல்துறையினர் அதனை நிறுத்த முயன்றனர்.  ஆனால் அவர்கள் நிறுத்தாமல் சென்றதை அடுத்து போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் அந்த வாகனத்தில் 52 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து, தமிழகத்தை சேர்ந்த 11 பேர் உள்பட 13 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Exit mobile version