ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ராப்பூர் பகுதியில், செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட சூரிய நாராயண, தம்மி நேனி பாபு, ஜல்லி ஹரிகிருஷ்ணா ஆகியோரிடம் ராப்பூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், திருப்பதியைச் சேர்ந்த சுப்பாரெட்டி என்பவருக்கும் கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரையும் கைது செய்த காவல்துறையினர், 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 13 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

Exit mobile version