இலங்கைக்கு சுற்றுலா விசாவில் சென்றிருந்த இந்தியர்கள் 108 பேர் கைது

சுற்றுலா விசாவில் இலங்கை சென்றிருந்த 108 இந்தியர்கள் அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது.

253 பேரை பலி கொண்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து, இலங்கையில் தொடர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக வெளிநாட்டவர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சுற்றுலா விசாவில் சென்ற இந்தியர்கள் 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு விதிமுறைகளை அவர்கள் மீறியதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அலுக்கமா, பெந்தொட்டை பகுதிகளில் கட்டிட வேலையில் ஈடுபட்டு வரும் இந்தியர்களில் 48 பேர் விசா காலம் முடிந்து தங்கி இருப்பது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version