வேதாரண்யத்தில் உள்ள 22 அரசு பள்ளிகள், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி

கஜா புயல் பாதித்த நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள 22 அரசு பள்ளிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி வீசிய கஜா புயால் காரணமாக டெல்டா மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்தது.

பள்ளிகள் அனைத்தும் முகாம்களாக அறிவிக்கப்பட்டு மக்கள் தங்க வைக்கப்பட்டனர். இதனால், மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டது. இருப்பினும் ஆசிரியர்களின் அயராத உழைப்பால், பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மாணவர்கள் 100% தேர்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version