விஷப் பூச்சிகளின் அச்சுறுத்தல்

கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். இந்தநிலையில் மழை வெள்ள பாதிப்பு சற்று குறைந்துள்ளதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். இதனிடையே வெள்ள பாதிப்பால் அவதிப்பட்ட பொதுமக்களுக்கு மேலும் ஒரு அச்சுறுத்தலாக, வீடுகளுக்குள் புகுந்துள்ள பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் உருவெடுத்துள்ளன. விஷக்கடி காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version