விபத்தில் உயிரிழப்பவர்களில் 90 சதவீதம் பேர் தலைக்கவசம் அணியாதவர்கள் – ஏ.கே. விஸ்வநாதன்!

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஏ.கே. விஸ்வநாதன், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து மாணவர்கள் மத்தியில் பேசினார்.

விபத்துகளில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை 70 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், இதில் 90 சதவீதம் பேர் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் பலியாவதாகவும் அவர் கூறினார்.

போக்குவரத்து விதிகளை வற்புறுத்தி பின்பற்ற வைக்க முடியாது என்று தெரிவித்த விஸ்வநாதன், சுய ஒழுக்கத்தின் மூலமே விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Exit mobile version