நகராட்சி கமிஷனருக்கும் உறுப்பினர்களுக்கும் கடும் வாக்குவாதம் !

பூந்தமல்லி நகர மன்ற ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சி கமிஷ்னர், நகர மன்ற உறுப்பினரின் கணவருக்கும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பூந்தமல்லி நகர மன்ற கூட்டம் நகராட்சி கமிஷ்னர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்பாக, நகரமன்ற உறுப்பினர்கள், மற்றும் நகராட்சி கமிஷ்னர், அதிகாரிகள் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அப்போது நகராட்சியில் நிலம் வரைமுறை, கட்டிட அனுமதி, காலி வீட்டு மனை வரி ஆகியவை குறித்த பணிகள் உரிய முறையில் நடக்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து நகராட்சி கமிஷனருக்கும், நகர மன்ற உறுப்பினர்களின் கணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version