வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம் – அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டார்.

வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் உள்ள 67,644 வாக்குச் சாவடிகளில் இந்த சிறப்பு முகாமுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட துவக்கப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமை, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டார். வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கான அடுத்தகட்ட முகாம் அக்டோபர் 7 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version