ரூபாய் மதிப்பு சரிவதன் ரகசியம் சொல்கிறார் சுப்ரமணியன் சுவாமி.

கோவாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இவ்வாறு கூறியுள்ளார்.

அமெரிக்கா, முன்னேறிய நாடாக இருக்கும் வரை டாலரின் மதிப்பு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் இருந்து இந்திய ரூபாய் கருப்புப்பணமாக வெளியே சென்று கொண்டிருப்பதால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய பண மதிப்பு சரிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மிக வளர்ந்த நாடு என்ற நிலையை அமெரிக்கா இழக்க நேரும் போதுதான் மற்ற நாடுகளின் பண மதிப்பு கூடும் என்றார் அவர் . அதுவரை சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வதை தடுக்க இயலாது என்றும் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

Exit mobile version