மீண்டும் நிதியமைச்சரானார் அருண்ஜேட்லி

கடந்த ஏப்ரல் மாதம் சிறுநீரகம் கோளாறு காரணமாக அருண் ஜெட்லிக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இதற்காக மத்திய நிதியமைச்சர் பொறுப்பில் இருந்து அவர் விடுப்பில் இருந்தார். இதனையடுத்து அப்பதவியை ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூடுதலாக கவனித்து வந்தார். இந்தநிலையில் அருண்ஜெட்லியின் உடல் சீரடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று முதல் நிதித்துறையை அருண் ஜெட்லி மீண்டும் கவனிப்பார் என குடியரசு தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Exit mobile version