பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் செயல்படும்

பெட்ரோல், டீசல் பொருட்கள் மீதான வரியை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு திமுக, மதசார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றாலும், பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் செயல்படும் என்று, தமிழ்நாடு பெட்ரோல் பங்குகள் உரிமையாளர் சங்க தலைவர் முரளி தெரிவித்துள்ளார். மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்து இருப்பதாக அவர் கூறி உள்ளார்.

Exit mobile version