புதுச்சேரியில் முழுஅடைப்பு

பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து நாடு தழுவிய அளவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அண்டை மாநிலமாக புதுச்சேரியில், காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. எனவே, அந்த மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், லாரிகள் இயக்கப்படவில்லை. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால், இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முழு அடைப்பு காரணமாக தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்துகள் எதுவும் இயக்கப்பட்டவில்லை.

Exit mobile version