புதிய மதுக்கடைகள் திறக்கப்படாது – அமைச்சர் தங்கமணி

நாமக்கல் சேந்தமங்கலம் சாலையில் உள்ள பள்ளிவாசல் வளாகத்தில் புதிய தளம் அமைக்கும் பணியை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் தற்போது வரை 2 ஆயிரம் மதுக்கடைகளை அரசு மூடி உள்ளதாக குறிப்பிட்டார். புதிய மதுக் கடைகளை திறக்கும் திட்டம், அரசிற்கு இல்லை என்றும், தமிழகத்தில் இனிமேல் புதிய மதுக்கடைகள் திறக்கப்படாது என்றும் அமைச்சர் தங்கமணி உறுதி அளித்தார்.

Exit mobile version