பிறந்து ஒரு சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை குப்பை தொட்டியில் சடலமாக கண்டெடுப்பு

வேளச்சேரியை அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் துப்புரவுப் பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, அங்குள்ள குப்பை தொட்டி ஒன்றில் பச்சிளம் பெண் குழந்தை சடலம் இருப்பதைக் கண்டு போலீசுக்கு தகவல் அளித்தனர்.

அங்கு வந்த போலீசார் குழந்தையின் சடலத்தை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சி.சி.டி.வியில் பதிவான காட்சிகளை கொண்டு குழந்தையை கொன்று வீசியவர்களை தேடி வருகின்றனர்.

Exit mobile version