7 வயது குழந்தை கடத்தல் – சிக்கிய குற்றவாளி

தருமபுரியை சேர்ந்த 7 வயது குழந்தையை கடத்திய, கோவையை சேர்ந்த சரவணக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.

கோவை வடவள்ளியை சேர்ந்த சரவணக்குமார் என்பவருக்கும் தருமபுரியை சேர்ந்த மோகனாம்பிகை என்பவருக்கும் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்த நிலையில், கார் வாங்குவதற்காக சரவணக்குமாரிடம் ஒன்றரை லட்சம் ரூபாயை மோகனாம்பிகை பெற்றுள்ளார்.

உரிய நேரத்தில் பணத்தை திருப்பிக்கொடுக்காததால் ஆத்திரமடைந்த சரவணக்குமார், தருமபுரிக்கு சென்று மோகனாம்பிகையின் 7 வயது மகனை கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து தாய் அளித்த புகாரின்பேரில் கோவை விரைந்த போலீசார், சரவணக்குமாரை கைதுசெய்து சிறுவனை மீட்டனர்.

Exit mobile version