பாகிஸ்தானுக்கு பதிலடி – இந்திய ராணுவ தளபதி ஆவேசம்

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டியது அவசியம் என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாகிஸ்தான் ராணுவம், மற்றும் தீவிரவாதிகளின் காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு, பதிலடி கொடுக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார்.

இந்திய வீரர்களை சித்ரவதை செய்து கொல்லும்போது நாம் படும் வேதனையை அவர்களும் உணர வேண்டும். இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றால் தீவிரவாதத்தை பாகிஸ்தான் அரசு கட்டுப்படுத்த வேண்டும். தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் ராணுவம் சுதந்திரமாக செயல்படுகிறது என்றும் ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்தார்.

Exit mobile version