நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக தயார் – தங்கமணி

நாமக்கல் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்செங்கோடு கழக கட்டடத்தில் நடைபெற்றது. மாவட்ட கழக அவைத் தலைவர் பி.ஆர்.சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அமைச்சர் தங்கமணி, மாவட்ட கழக துணை செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் தங்கமணி, வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக தயாராகி வருவதாக தெரிவித்தார். மக்களின் விருப்பம்போல், தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நல்லாட்சி நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார். இதை எடுத்துக்கூறும் விதமாக சைக்கிள் பேரணி, பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்படுவதாகவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். 

Exit mobile version