நத்தத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்  விநாயகர் சிலைகள் கரைப்பு! 

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. 

கோவில்பட்டி ஆஞ்சநேயர் கோவில்  முன்பாக ஊர்வலம் புறபட்டது. மேளதாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் அலங்கரிக்கபட்ட வாகனங்களில்  சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 45க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லபட்டன.

ஊர்வலமானது பஸ்நிலையம், மூன்றுலாந்தர், அவுட்டர் சாலை வழியாக சென்று அம்மன் திருக்குளத்தை அடைந்தது. அங்கு சிறப்பு  பூஜைகள் நடத்தப்பட்டு சிலைகள் கரைக்கப்பட்டன. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். 

 

 

Exit mobile version