தென்காசியில் அட்டகாசம் செய்யும் 4 யானைகள்

 

தென்காசி அருகே 4 யானைகள் பயிர்களை சேதப்படுத்தி, அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

தென்காசி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது வடகரை கிராமம். இந்த பகுதியில் வாழை மற்றும் தென்னை,நெற் பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகின்றன. இங்கு கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக கடந்த 20 நாட்களாக 4 யானைகள் கொண்ட கூட்டம் அடிக்கடி பயிர்களை சேதப்படுத்தி வருகின்றது.
இந்த 4 யானைகளும் அடவிநயினார் அணைக்கு செல்லும் பாதையிலுள்ள செம்போடை வளவு மற்றும் இரண்டாவது வளவு போன்ற பகுதிகளில் சுமார் இரண்டு ஏக்கருக்கு மேல் பயிர்களை சேதப்படுத்திஉள்ளன. இதனால் விவசாயிகள் விளைநிலங்களுக்கு செல்ல முடியாமல் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். யானைகளை காட்டுப்பகுதிக்குள் விரட்டி விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version