குற்றால அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்

கனமழை காரணமாக தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் மூன்றாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக, குற்றாலத்தில், மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதனால், அப்பகுதிகளில் நீர் நிலைகள் தொடர்ந்து நிரம்பி வருகின்றன. இந்நிலையில், மலைப் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், தொடர்ந்து மூன்றாவது நாளாக, அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 

Exit mobile version