திமுக பொருளாளராக துரை முருகன் தேர்வு

சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுவில் பேசிய க.அன்பழகன், பொருளாளர் பதவிக்கு துரை முருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அறிவித்தார். முன்னதாக பொதுக்குழுவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, ஐ.நா. முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அனன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. மேலும், கேரளாவில் வெள்ள பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதேபோன்று, கருணாநிதியின் மறைவை அறிந்து உயிரிழந்த திமுகவினர் 248 பேரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டது.

Exit mobile version