தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட விவகாரம் – கெஜ்ரிவாலுக்கு சம்மன்

தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட 11 பேருக்கு, நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.

கெஜ்ரிவால் வீட்டில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், தலைமைச் செயலாளர் அன்ஷூ பிரகாஷ் கலந்து கொண்டார். ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அவரை தாக்கியதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் டெல்லி போலீசார், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில், தலைமைச் செயலாளர் தாக்கப்பட்டதற்கு முதலமைச்சர் கெஜ்ரிவால் உள்பட 11 பேர் பொறுப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மனீஸ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் உள்பட 11 பேருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. அவர்கள் அக்டோபர் 25ம் தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version