தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் அனுப்பிய வாழ்த்து

இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக வீரர்கள் பரிசுகளை குவித்து வருகின்றனர். ஆண்கள் பாய்மரப்படகு குழுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வருண்தக்கர், கே.சி.கணபதி ஆகிய வீரர்கள் வெண்கலப் பதக்கம் வென்றனர். அவர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி 20 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை அறிவித்து, வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தில், தங்களின் வெற்றி நாட்டுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version