தமிழகம் மற்றும் புதுவையில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் – பாலச்சந்திரன்

தமிழகம் மற்றும் புதுவையில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதால், தமிழகம் மற்றும் புதுவையில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று தெரிவித்தார்.

வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும் என்றும், சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் பாலசந்திரன் கூறினார். கடலுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

Exit mobile version