தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்

வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அது எந்த திசையில் நகர்கிறது என்று தெரியும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் தமிழகத்தின் தென்மேற்கு பகுதியில் வளி மண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னையை பொருத்தவரை லேசான சாரல் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version