தனது குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு என மு.க.ஸ்டாலின் கணக்கு தருவாரா? -மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

தனது குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு என மு.க.ஸ்டாலின் கணக்கு தருவாரா? என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எதிர்க்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அழைப்பிதழில் ஸ்டாலினுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விழாவில் கலந்து கொள்வதும், கொள்ளாததும் அவரது விருப்பம் என்று கூறிய ஜெயக்குமார், அரசியல் பண்பாடு திமுகவிற்கு கிடையாது என்று குறிப்பிட்டார்.

நானும் ரவுடிதான் என்ற அடிப்படையில் மு.க.ஸ்டாலின் செயல்படுவதாக விமர்சித்த அவர், பல்வேறு ஊழல்களை செய்தது திமுகதான் எனபதை மறந்து விடக்கூடாது என்றார்.

தனது குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு என மு.க.ஸ்டாலின் கணக்கு தருவாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கமல் மற்றும் ஒடிசா முதல்வர் சந்திப்பு பற்றிய கேள்விக்கு ”அதனால் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடாது” என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Exit mobile version