தங்க மங்கை ஆஷிகாவிற்கு உற்சாக வரவேற்பு

புதுச்சேரியை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி ஆஷிகா, தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலக பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டார். 20க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இதில் கலந்து கொண்டனர். இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனையை வீழ்த்திய ஆஷிகா தங்கப் பதக்கத்தை தனதாக்கினார். இந்தநிலையில், சென்னை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Exit mobile version