ஜெயின் துறவி முனி தருண் சாகர் மறைவு முதலமைச்சர் இரங்கல்

ஜெயின் சமூகத்தின் துறவி முனி தருண் சாகர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் டெல்லியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி காலமானார். இந்தநிலையில், துறவி முனி தருண் சாகரின் மறைவு ஜெயின் சமயத்திற்கு பேரிழப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரை இழந்துவாடும் ஜெயின் சமயத்தின் பெரியவர்களுக்கும், அவரது பக்தர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். துறவி முனி தருண் சாகரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Exit mobile version