News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home தமிழ்நாடு

சாட்சிகள் விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்ட மாறன் சகோதரர்கள் மீதான வழக்கு

Web Team by Web Team
October 4, 2018
in தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
சாட்சிகள் விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்ட மாறன் சகோதரர்கள் மீதான வழக்கு
Share on FacebookShare on Twitter

தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக பதவி வகித்த போது, தனது சகோதரர் கலாநிதி மாறனின் சன் தொலைக்காட்சிக்கு, சென்னை பி.எஸ்.என்.எல்.லின் அதிவிரைவு தொலைபேசியின் 700 க்கும் மேற்பட்ட இணைப்புகளை, முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தச் சட்டவிரோத தொலைபேசி இணைப்புகள் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது.

இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
முறைகேடுகளில் ஈடுபட்டதாக 2007 ஆம் ஆண்டில் சென்னை BSNL-ன் பொது மேலாளராக இருந்த கே.பி.பிரம்மநாதன், அந்த நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் வேலுசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், தயாநிதி மாறனின் தனிச் செயலாளராக இருந்த வேதகிரி கவுதமன், சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், சன் தொலைக்காட்சி எலக்ட்ரீஷியன் ரவி, சன் தொலைக்காட்சி தலைவர் கலாநிதி மாறன் ஆகிய 7 பேர் மீது டெல்லி சிபிஐ போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
தயாநிதி மாறன் அரசுக்கு 1,78,71,391 ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளார் என குற்றபத்திரிகையில் கூறப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என மாறி மாறி குற்றம்சாட்டப்பட்டவர்கள் மனுக்களை தாக்கல் செய்து வந்த நிலையில், விசாரணை நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்குமாறு 7 பேருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனையடுத்து விசாரணை நீதிமன்றத்தின் சென்னை 14 ஆவது சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஆர்.வசந்தி முன் சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேருக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யபட்டது.
அக்டோபர் 4 ஆம் தேதி முதல் சாட்சிகள் விசாரணை தொடங்கும் என நீதிபதி அறிவித்தார்.
அதன்படி மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சாட்சி விசாரணை தொடங்க வேண்டாம் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்தார்.
சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சாட்சிகளை பின்னர் ஆஜர்படுத்துவதாக கூறினார்.
இதனையடுத்து, சாட்சிகள் விசாரணையை வரும் 6 ஆம் தேதி தள்ளிவைப்பதாக நீதிபதி வசந்தி உத்தரவிட்டுள்ளார்.

Tags: case againstMaran Brotherspostponing the trial
Previous Post

கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் கருணாஸின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்கலாம் – சட்ட நிபுணர்கள் கருத்து

Next Post

தொழிற் பயிற்சி மையங்களை தொடங்கி வைத்தார் – அமைச்சர் நிலோபர் கபில்

Related Posts

மாறன் சகோதரர்களுக்கு எதிரான சாட்சிகளுக்கு சம்மன் அனுப்ப உத்தரவு
TopNews

மாறன் சகோதரர்களுக்கு எதிரான சாட்சிகளுக்கு சம்மன் அனுப்ப உத்தரவு

April 12, 2019
மாறன் சகோதரர்களுக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளன- சிபிஐ தகவல்
TopNews

மாறன் சகோதரர்களுக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளன- சிபிஐ தகவல்

March 8, 2019
ரூ.2000 நிதியுதவி அளிக்கும் திட்டத்தை எதிர்த்து வழக்கு
TopNews

ரூ.2000 நிதியுதவி அளிக்கும் திட்டத்தை எதிர்த்து வழக்கு

February 15, 2019
நோட்டீஸை ரத்து செய்ய முடியாது – தயாநிதி மாறனுக்கு உயர்நீதி மன்றம் பதில்
தமிழ்நாடு

நோட்டீஸை ரத்து செய்ய முடியாது – தயாநிதி மாறனுக்கு உயர்நீதி மன்றம் பதில்

October 11, 2018
மாறன் சகோதரர்கள் கோரிக்கை ஏற்க மறுப்பு – நெருங்கும் விசாரணை வளையம்
TopNews

மாறன் சகோதரர்கள் கோரிக்கை ஏற்க மறுப்பு – நெருங்கும் விசாரணை வளையம்

October 4, 2018
Next Post
தொழிற் பயிற்சி மையங்களை தொடங்கி வைத்தார் – அமைச்சர் நிலோபர் கபில்

தொழிற் பயிற்சி மையங்களை தொடங்கி வைத்தார் - அமைச்சர் நிலோபர் கபில்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version