கோடைக்கால ஒலிம்பிக் போட்டி சுடர் அர்ஜென்டீனாவை சென்றடைந்தது

கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், அதற்கான சுடர் அர்ஜென்டீனாவை சென்றடைந்தது.

உலக அளவில் இளையோருக்கான கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் அர்ஜென்டினாவில் 6ம் தேதி தொடங்குகின்றன. இதில் 206 நாடுகளை சேர்ந்த சுமார் 4 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.

15 வயது முதல் 18 வயதுடைய வீரர், வீராங்கனைகள் 32 வகையான போட்டிகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்த உள்ளனர். இதற்கான ஒலிம்புக் சுடர் உலகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டது.

14 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்த ஒலிம்பிக் சுடர் அர்ஜென்டீனாவின் Ushuaia நகரை வந்து சேர்ந்தது. ஒலிம்பிக் சுடரை சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தாமஸ் பச் பெற்றுக்கொண்டார்.

Exit mobile version