குழந்தைகளை கொன்ற கொடூர தாய்

குன்றத்தூர் மூன்றாம் கட்டளையில் வசித்து வருபவர் விஜய். இவரது மனைவி அபிராமி. இவர்களுக்கு, அஜய், கார்னிகா என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். கணவன், மனைவி இடையே கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று தனது இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, அபிராமி தலைமறைவானார். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து அபிராமியை தேடி வந்தனர். இந்தநிலையில், நாகர்கோவிலில் பதுங்கி இருந்தவரை போலீசார் கைது செய்தனர். குழந்தைகளை கொலை செய்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version