குமாரசாமிக்கு ஆறுதல் தந்த நீதிமன்றம்

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே தனிசந்தரா என்ற பகுதியில் பெங்களூரு வளர்ச்சி குழுமம் சார்பில் வீட்டு மனை வழங்கப்பட்டது. 2007ல் இதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது முதலமைச்சராக இருந்த குமாரசாமி, முன்னாள் அமைச்சர் மற்றும் சில அதிகாரிகள் மீது நில மோசடி புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்தநிலையில், குமாரசாமி உள்ளிட்டோர் முறைகேடு செய்ததற்கான எந்த ஆதாரமும் தாக்கல் செய்யாததால், அவர்கள் வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார்.

 

Exit mobile version