குட்டையில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே ராமபட்டினம் புதூரில் குட்டையில் குளிக்கச் சென்ற 4ஆம் வகுப்பு மாணவி நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள ஆயக்குடியில் வசித்து வரும் விவசாயி அழகர் என்பவரின் மகள் ஸ்ரீதிரி, ஆயக்குடியில் உள்ள அரசு பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டதால், தனது தோழிகளுடன் ராமபட்டினம் புதூரில் உள்ள குளத்தில் நீச்சல் பழக சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக, சிறுமி நீரில் மூழ்கி உள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற சிறுமிகள் கூச்சலிட்டதைத் தொடர்ந்து, அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் தண்ணீரில் மூழ்கிய சிறுமியை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டும் செல்லும் வழியிலேயே, சிறுமி ஸ்ரீதிரி உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version