கருணாநிதியின் நினைவஞ்சலி கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்க மாட்டார்

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ஆம் தேதி காலமானார். அவருக்கு புகழ் வணக்க கூட்டங்கள் நடத்த திமுக தலைமை முடிவு செய்துள்ளது. இதனடிப்படையில் பல்வேறு இடங்களில் நினைவஞ்சலி கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், வரும் 30ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற புகழ் வணக்க கூட்டத்தில் பங்கேற்க பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து, கருணாநிதி புகழ் வணக்க கூட்டத்தில் அமித்ஷா கலந்துகொள்வார் என தகவல் வெளியானது. இந்தநிலையில், திமுக ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் அமித்ஷா கலந்துகொள்ளமாட்டார் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள அவர், கருணாநிதி புகழ் வணக்க கூட்டத்தில், அமித்ஷா கலந்துகொள்ளமாட்டார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளார். இதனிடையே அமித்ஷாவின் சென்னை வருகை குறித்து தமிழக பாஜக தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version